மனித ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் ஆஸ்திரேலியாவின் கணினி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.
கணினிகள் நாளுக்கு நாள் சிறிதாகிவருகிறன என்றாலும் அவற்றின் சக்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கணினியில் பயன்படுத்தப்படும் உட்கூறுகளும் சின்னதாகிக்கொண்டே வருகின்றன.
அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத, அதிக வெப்பத்தை வெளியிடாத, அதிகம் மின் விரயம் செய்யாத கணினி உட்பொருட்களை உருவாக்குவதென்பது ஆராசய்ச்சியாளர்களுக்கு சிக்கல் நிறைந்த விஷயமாகவே இருந்து வந்துள்ளது.
அந்த சிக்கலைத் தீர்ப்பதில் பெரியதொரு முன்னேற்றம் கண்டிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
நான்கு அணுக்கள் மட்டுமே அகலமும் ஒரு அணு மட்டுமே உயரமும் கொண்ட நுண்ணிய மின் கம்பிகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இவை உலோகக் கம்பிகள் அல்ல, சிலிகானால் ஆனவை.
சிலிகான் அணுக்களுடன் பாஸ்பரஸ் அணுக்களை கலந்து இந்த நுண்கம்பி உருவாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யும்போது, கம்பியின் மின் கடத்தும் மையப்பகுதி பாதுகாக்கப்படும் அதே நேரம் கடத்தப்படும் மின்சாரம் அதிகம் விரயமும் ஆவதில்லை.
குவாண்டம் கணினிகள் என்று சொல்லப்படுகின்ற அதிவேகத் திறன் கொண்ட அடுத்த தலைமுறைகளைக் கணினிகளை உருவாக்குவதற்கு இந்த நுண்கம்பிகள் மிக அவசியமாகத் தேவைப்படும்.
Friday, February 3, 2012
Subscribe to:
Post Comments (Atom)
Online shops
உலகளாவிய ரீதியில் online மூலமான வியாபாரங்கள் அதிகரித்து நேரடியான கடைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்லும். இதனால் கடைகள் 24 மணித்தியாலமும...
-
அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக...
-
1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உண...
-
ஒரு ஆள் ஹைவே ஒன்றில் மிகவும் ஸ்லோவாக காரை ஒட்டிக் கொண்டு இருந்தான். அவனை அணுகிய ஒரு ட்ராபிக் இன்ஸ்பெக்டர், சார், கொஞ்சம் வேகமாக ஒட்டுங்கள்...
No comments:
Post a Comment